search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக தலைமைச் செயலகம்
    X
    தமிழக தலைமைச் செயலகம்

    கொரோனா பரவலை தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் -தமிழக அரசு அறிவிப்பு

    புதிய திரைப்படங்களுக்கு முதல் 7 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த கட்டுப்பாடுகளுடன் இன்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிககையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் 11-4-2021 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

    சென்னை மெரினா கடற்கரை

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மக்கள் கூட தடை விதிக்கப்படுகிறது.

    அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய, இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு, தற்போது சம்பந்தப்பட்ட வழிபாட்டு தலங்களின் வழக்கமான நேரம் வரையிலோ அல்லது அதிகபட்சம் இரவு 10 மணி வரை, பொதுமக்கள் வழிபாட்டிற்காக அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது. 

    சென்னை பார்த்தசாரதி கோவில்

    இருப்பினும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

    இந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள், முதல் ஏழு நாட்களுக்கு மட்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி திரையிடலாம். அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×