search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தட்டார்மடம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    தட்டார்மடம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சாத்தான்குளம்:

    தட்டார்மடம் அருகே உள்ள புத்தன்தருவையை அடுத்த வெள்ளிவிளையைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 43). தொழிலாளி. இவரது மனைவி மேரி சிந்தியா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ஜார்ஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

    இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனை அடைந்த ஜார்ஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தட்டார்மடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி‌ வைத்தனர். இதுகுறித்து போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×