search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சரவணம்பட்டியில் ஓட்டலில் விபசாரம் - 4 அழகிகள் மீட்பு

    சரவணம்பட்டி அருகே ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்ட 4 அழகிகளை மீட்ட போலீசார் பிரோக்கரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி அடுத்த விளாங்குறிச்சி பகுதியில் ஒரு பிரபல ஓட்டல் இயங்கி வருகிறது. அங்கு ஆண்கள் அடிக்கடி வந்து செல்வதாக அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு சாதாரன உடையில் சென்று அறை எடுப்பது போல விபரங்களை விசாரித்தனர். அப்போது அங்கு உள்ளவர்கள் அறை மட்டும் வேண்டுமா அல்லது அழகிகளும் வேண்டுமா என்று கூறி இளம்பெண்களின் புகைப்படங்களை காட்டி உள்ளார்கள்.

    இதையடுத்து போலீசார் அங்கு விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அந்த ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அறையில் விபசாரத்திற்காக அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த பெங்களூருவை சேர்ந்த 2 பெண்கள், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 29 வயது பெண், மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் ஆகிய 4 அழகிகளை அதிரடியாக மீட்டனர். இளம் பெண்களை விபச்சாரத்துக்கு அழைத்து வந்து புரோக்கராக செயல்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த முருகேஷ் (31) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் பிரபல விபசார புரோக்கர்கள் பாலாஜி மற்றும் சிவாவைதேடி வருகின்றனர். இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓட்டலில் தங்கி இருந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும், மாணவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வழக்கும் உள்ளது.

    Next Story
    ×