search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரக்கோணம் அருகே 2 பேர் கொலை: வாலிபர்கள் உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம்

    அரக்கோணம் அருகே 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வாலிபர்கள் உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சித்தம்பாடி பகுதியில் கடந்த 7-ந் தேதி இரவு இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    அரக்கோணம் அடுத்த சோகனூர் பகுதியை சேர்ந்த புதுமாப்பிள்ளை அர்ஜுன் (வயது 20), செம்பேடு பகுதியை சேர்ந்த சூர்யா (25) ஆகிய 2 வாலிபர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். மதன், சவுந்தர்ராஜன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து அர்ஜுன், சூர்யா அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பக்கத்து கிராமமான பெருமாள் ராஜபேட்டையை சேர்ந்த ராஜவேலு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அறுவடை செய்து சேமித்து வைத்திருந்த நெற்குவியல் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் நெற்குவியல் மற்றும் டிராக்டர் தீயில் கருகி நாசமாகியது.

    சாலை மறியல் தீவைப்பு சம்பவம் நடந்ததை தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவின் பேரில் அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த வழக்கு தொடர்பாக பெருமாள் ராஜா பேட்டையை சேர்ந்த புலி என்ற சுரேந்திரன் (19), அஜித் (24), மதன் (37), நந்தகுமார் (20), சத்யா (24), சாலை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (20), ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து மீதமுள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றும் 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்தது.

    அர்ஜுன், சூர்யா ஆகிய 2 பேரின் உடல்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் இருவரின் உடல்களையும் உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சிவகுமார், அரக்கோணம் டி.எஸ்.பி. மனோகரன் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேற்று சோகனூர் வந்தார்.

    கொலையான சூர்யா, அர்ஜூன் ஆகியோர் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார். தங்கள் கட்சி நிதியாக ரூ.1 லட்சம் வழங்கினார்.

    கிராம மக்கள் தொடர்ந்து 4-வது நாளாக இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அனைத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

    Next Story
    ×