search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாங்குநேரியில் மொபட் திருடியவர் கைது

    நாங்குநேரியில் மொபட் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார்குளத்தை சேர்ந்தவர் வாணுமாமலை (வயது29). இவர் நேற்று நாங்குநேரி யூனியன் அலுவலகம் முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் வாணுமாமலையின் மொபட்டை திருடி சென்றார்.

    இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அந்த நபரை விரட்டி பிடித்து நாங்குநேரி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஏர்வாடி அருகே உள்ள வேப்பங்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிநாராயணன் (48) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×