என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது: மருத்துவக்கல்லூரி ஊழியர் பலி
Byமாலை மலர்10 April 2021 1:20 AM GMT (Updated: 10 April 2021 1:22 AM GMT)
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் மருத்துவக்கல்லூரி ஊழியர் உயிரிழந்தார்.
வல்லம்:
தஞ்சையை அருகே உள்ள குருவாடிப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 56). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி விடுதியில் கிளார்க்காக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியன் திருமலைசமுத்திரத்தில் அவருடைய உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி தஞ்சை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்புறம் வந்த அரசு பஸ் திடீரென பாலசுப்ரமணியன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X