என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுமா?
Byமாலை மலர்9 April 2021 10:45 AM GMT (Updated: 9 April 2021 10:45 AM GMT)
கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி:
தமிழகத்தில் கொரனோ 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.நாளுக்குநாள் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்து வருகின்றனர். ஆனால் மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வு பயம் இல்லை என்பதே வேதனைக்குரியதாகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். ஆனால் அதை பொதுமக்கள் யாரும் பின்பற்றாமல் எந்தவித அச்சமுமின்றி அணியாமல் உள்ளனர். குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பஸ் நிலையம், ரெயில் நிலையம், பேக்கரிகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் கூட முககவசம், கையுறை, சானிடைசர் ஆகியவை பயன்படுத்தப்படாத நிலை உள்ளது.
சிறு குழந்தைகளோடு வரும்போதும் இதே நிலைதான் உள்ளது. சுகாதாரத் துறையினரும் நகராட்சி நிர்வாகமும் இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரனோ 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.நாளுக்குநாள் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்து வருகின்றனர். ஆனால் மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வு பயம் இல்லை என்பதே வேதனைக்குரியதாகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். ஆனால் அதை பொதுமக்கள் யாரும் பின்பற்றாமல் எந்தவித அச்சமுமின்றி அணியாமல் உள்ளனர். குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பஸ் நிலையம், ரெயில் நிலையம், பேக்கரிகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் கூட முககவசம், கையுறை, சானிடைசர் ஆகியவை பயன்படுத்தப்படாத நிலை உள்ளது.
சிறு குழந்தைகளோடு வரும்போதும் இதே நிலைதான் உள்ளது. சுகாதாரத் துறையினரும் நகராட்சி நிர்வாகமும் இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X