என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்9 April 2021 2:46 AM GMT (Updated: 9 April 2021 12:22 PM GMT)
காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வீரபாண்டி:
திருப்பூரில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் பலவஞ்சிபாளையம் அபிராமி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் தினேஷ் குமார் (வயது 23). கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போதும் அவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை தொடர்ந்து, அந்த பெண்ணை, தினேஷ்குமார் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தினேஷ்குமாரை காதலித்து வந்த பெண் திடீரென்று காதல் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ்குமார் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தினேஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார் தினேஷ்குமார் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் பலவஞ்சிபாளையம் அபிராமி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் தினேஷ் குமார் (வயது 23). கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போதும் அவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை தொடர்ந்து, அந்த பெண்ணை, தினேஷ்குமார் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தினேஷ்குமாரை காதலித்து வந்த பெண் திடீரென்று காதல் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ்குமார் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தினேஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார் தினேஷ்குமார் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X