search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    குடவாசல் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

    குடவாசல் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடவாசல்:

    குடவாசல் அருகே உள்ள செல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வம். இவர் குடியிருப்பு கட்டி வருகிறார். இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று திருவாரூர் அருகே உள்ள கேக்கரை பிடாரி கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கட்டுமான பணியில் ஈடுபட்டார். அப்போது கட்டிடத்தின் அருகே சென்ற மின்கம்பிகள் மீது பிரகாஷ் கை உரசியது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பிரகாசின் தாயார் தங்கம்மாள் குடவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இறந்த பிரகாசின் உடலை போலீசார் கைப்பற்றி திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×