என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டை அருகே நீரில் மூழ்கி சிறுவன் பலி
Byமாலை மலர்7 April 2021 1:18 PM GMT (Updated: 7 April 2021 1:18 PM GMT)
ராணிப்பேட்டை அருகே நீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டையே அடுத்த அம்மூர் ரோட்டுக்கடை தெரு பகுதியை சேர்ந்தவர் கோபி. இவருடைய மகன் காமேஷ் (வயது 9). இவர் தனது தந்தை கோபியுடன் அம்மூரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் நீச்சல் பழக நேற்று மாலை சென்றுள்ளான். நீச்சல் பழகும்போது, எதிர்பாராதவிதமாக காமேஷ் கிணற்றில் மூழ்கிவிட்டான்.
இது குறித்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ராணிப்பேட்டை நிலைய அலுவலர் அரிகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 70 அடி ஆழமுள்ள கிணற்றில் சுமார் 2 மணி நேரம் தேடி காமேஷை பிணமாக மீட்டனர்.
இதுபற்றி தகவலறிந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் சிறுவன் காமேஷின் பிணத்தை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீச்சல் பழகிய போது தந்தையின் கண்முன்னே நீரில் மூழ்கி இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X