search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தஞ்சையில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 275 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 275 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று 2 ஆயிரத்து 375 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 494 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 115 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 19 ஆயிரத்து 395 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 58 வயது ஆண் மற்றும் 75 வயது ஆண் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 824 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×