என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏர்வாடி அருகே என்ஜினீயர் வீட்டில் சி.சி.டி.வி. கேமிராக்கள் திருட்டு
Byமாலை மலர்7 April 2021 11:04 AM GMT (Updated: 7 April 2021 11:04 AM GMT)
ஏர்வாடி அருகே என்ஜினீயர் வீட்டில் சி.சி.டி.வி. கேமிராக்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள பிளசண்ட் நகர் 2-வது மெயின் தெருவை சேர்ந்தவர் கலைசெழியன். இவரது மனைவி சோனியா (வயது 33). கலைசெழியன் கத்தார் நாட்டில் பொறியாளராக உள்ளார். இதனால் சோனியா தனது 2 மகள்களுடன் வசித்து வருகின்றார். சம்பவத்தன்று பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தில் தனது உறவினர் இறந்து விட்டதால் சோனியா, மகள்களுடன் வீட்டை பூட்டி விட்டு, அங்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராக்கள் மற்றும் மானிட்டர் உள்ளிட்டவற்றை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். இதுகுறித்து சோனியா ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X