என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே சிறுமலையில் 107 வயதில் வாக்களித்த முதியவர்
Byமாலை மலர்7 April 2021 3:06 AM GMT (Updated: 7 April 2021 3:06 AM GMT)
வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்காக தனது உறவினருடன் வந்த 107 வயது முதியவர் வாக்குச்சாவடி மையத்தில், பூத் சிலிப் மற்றும் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து தனது வாக்கை பதிவு செய்தார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பழையூரை சேர்ந்தவர் சின்னப்ப உடையார். 107 வயதான இவர், சிறுமலை பழையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்காக தனது உறவினர் ஒருவருடன் நேற்று வந்தார்.அதன் பின்னர் வாக்குச்சாவடி மையத்தில், பூத் சிலிப் மற்றும் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.
இதுகுறித்து சின்னப்ப உடையார் கூறும்போது, நேரம் தவறாமல் அளவான சாப்பாடு சாப்பிட வேண்டும். நிறைவான தூக்கம், உறவினர்களின் அன்பான கவனிப்பு ஆகியவற்றால் இன்னும் இளைஞர் போல் வாழ்ந்து வருகின்றேன். அடுத்த சட்டமன்ற தேர்தலையும் சந்திப்பேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X