என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே அய்யம்பேட்டை வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்த முதியவர் பலி
Byமாலை மலர்6 April 2021 8:41 AM GMT (Updated: 6 April 2021 8:41 AM GMT)
தஞ்சை அருகே இன்று காலை தேர்தலில் வாக்களிப்பதற்காக அய்யம்பேட்டையில் உள்ள ஸ்டார்லைன் மெட்ரிக் பள்ளிக்கு சென்ற முதியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை கீழவீதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 62).
இவர் இன்று காலை தேர்தலில் வாக்களிப்பதற்காக அய்யம்பேட்டையில் உள்ள ஸ்டார்லைன் மெட்ரிக் பள்ளிக்கு சென்றார். அங்கு வாக்களித்துவிட்டு வாக்குப்பதிவு மையத்தை விட்டு வெளியே வந்தார். சிறிது தூரம் வந்த அர்ஜுனன் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் பாதுகாப்பில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அர்ஜுனன் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். ஆனால் அவர் கண் விழிக்காததால் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அர்ஜுனனை சோதித்தனர்.
அதில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து அர்ஜுனன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X