search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    சாலை விதி மீறல்- 445 பேர் மீது வழக்கு

    ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 19 பேர் மீதும், அதிகபாரம் ஏற்றிச் சென்றதாகவும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்றதாகவும் தலா ஒருவர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 212 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 51 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் சென்றதாக 17 மீதும், இதர பிரிவுகளின் கீழ் 114 பேர் மீதும் என மொத்தம் 445 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.76 ஆயிரத்து 100 வசூலிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×