என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேரன்மாதேவியில் கார்- மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி பலி
Byமாலை மலர்5 April 2021 10:44 AM GMT (Updated: 5 April 2021 10:44 AM GMT)
சேரன்மாதேவியில் காரும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் வியாபாரி பலியானார்.
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் மாரியப்பன் (வயது 42). வியாபாரியான இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கடைகளுக்கு வியாபாரம் செய்வது வழக்கம்.
நேற்று வழக்கம் போல அம்ைபயில் இருந்து பத்தமடைக்கு வியாபாரத்திற்காக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பாளையங்கோட்டை - பாபநாசம் நெடுஞ்சாலையில், சேரன்மாதேவி தனியார் பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது நெல்லையில் இருந்து வெள்ளங்குளி நோக்கி வந்த காரும், மாரியப்பனின் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் உடனடியாக விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்தது பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியை சேர்ந்த சிதம்பரம் மகன் செந்தில்குமார் (48) என்பது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X