என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது விற்ற பெண் உள்பட 10 பேர் கைது
Byமாலை மலர்5 April 2021 9:50 AM GMT (Updated: 5 April 2021 9:50 AM GMT)
மது விற்ற பெண் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று முதல் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதியின்றி மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து அருகே உள்ள புளியம்பட்டியில், வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற சுமதி (வயது 40) என்பவரை திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கொடைக்கானல் பகுதியில் மது விற்ற லோகேஷ் (44), கார்த்திக் (24), நல்லதம்பி (41), ஜோசப் (46), பெரியசாமி (62) ஆகிய 5 பேரை கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் பெரும்பாறை பகுதியில் மது விற்ற வேல்முருகன் (26), கார்த்திகேயன் (34), கார்த்தி (42), கணேசன் (51) ஆகிய 4 பேரை தாண்டிக்குடி போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X