search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன சோதனை
    X
    வாகன சோதனை

    தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.88½ லட்சம் சிக்கியுள்ளது

    ஏரியூர் அருகே உள்ள மஞ்சாரஅள்ளி ஊராட்சி வடிவேல் கவுண்டனூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக பென்னாகரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் வந்தது.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் நேற்று இரவு 7 மணியுடன் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு முடி வடைந்தது.

    இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா? என பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீவிர வாகன சோதனையிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏரியூர் அருகே உள்ள மஞ்சாரஅள்ளி ஊராட்சி வடிவேல் கவுண்டனூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக பென்னாகரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாலமுருகன் தலைமையிலான பறக்கும் படையினர், விரைந்து சென்று புஷ்பராஜ் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.

    அங்கு வாக்குச்சீட்டுடன் கூடிய பையில், ரூ.2 லட்சத்து 23 ஆயிரம் இருப்பதும், அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை பென்னாகரம் தொகுதித தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட மொத்தம் ரூ.88 லட்சத்து 62 ஆயிரத்து 520-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதே போல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.67 லட்சத்து 94 ஆயிரத்து 998 மதிப்புள்ள நகைகள் மற்றும் பிற பொருட்கள் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×