என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.2¾ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
Byமாலை மலர்5 April 2021 2:18 AM GMT (Updated: 5 April 2021 2:18 AM GMT)
தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை:
தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகனசோதனை நடத்தி பணம், மதுபாட்டில்கள், தங்கம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதை தொடர்ந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கொண்டு கடத்தப்படுவதை தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் நேற்று கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.37 ஆயிரத்து 104 மதிப்பிலான மதுபாட்டில்களும், சூலூரில் ரூ.32 ஆயிரத்து 520 மதிப்பிலான மதுபாட்டில்களும், கிணத்துக்கடவு தொகுதியில் ரூ.36 ஆயிரத்து 84 மதிப்பிலான மதுபாட்டில்கள் என மொத்தம் ஒரே நாளில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 676 மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக கோவை வடக்கு தொகுதியில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்து 500, சிங்காநல்லூர் தொகுதியில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 300 என மாவட்டம் முழுவதும் ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்து 720 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கோவையில் இதுவரை ரூ.6 கோடியே 83 லட்சத்து 75 ஆயிரத்து 318 ரொக்கம், ரூ.70 லட்சத்து 14 ஆயிரத்து 282 மதிப்பிலான மதுப்பாட்டில்கள் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் ரூ.55 கோடியே 47 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகனசோதனை நடத்தி பணம், மதுபாட்டில்கள், தங்கம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதை தொடர்ந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கொண்டு கடத்தப்படுவதை தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் நேற்று கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.37 ஆயிரத்து 104 மதிப்பிலான மதுபாட்டில்களும், சூலூரில் ரூ.32 ஆயிரத்து 520 மதிப்பிலான மதுபாட்டில்களும், கிணத்துக்கடவு தொகுதியில் ரூ.36 ஆயிரத்து 84 மதிப்பிலான மதுபாட்டில்கள் என மொத்தம் ஒரே நாளில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 676 மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக கோவை வடக்கு தொகுதியில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்து 500, சிங்காநல்லூர் தொகுதியில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 300 என மாவட்டம் முழுவதும் ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்து 720 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கோவையில் இதுவரை ரூ.6 கோடியே 83 லட்சத்து 75 ஆயிரத்து 318 ரொக்கம், ரூ.70 லட்சத்து 14 ஆயிரத்து 282 மதிப்பிலான மதுப்பாட்டில்கள் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் ரூ.55 கோடியே 47 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X