என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.3 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல்
Byமாலை மலர்4 April 2021 1:44 PM GMT (Updated: 4 April 2021 1:44 PM GMT)
திருப்பத்தூர் தாலுகா கொரட்டி பகுதியில் திருப்பத்தூர் சட்டமன்ற தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா கொரட்டி பகுதியில் திருப்பத்தூர் சட்டமன்ற தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா அருந்ததியர் பகுதியை சேர்ந்த செல்வமணி (வயது 38) என்பவர் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச்சென்ற 1 லட்சத்து 27 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் தாலுகா நரியனேரி கிராமத்தில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பிரசாந்த் (26) என்பவர் மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் தாலுகா கொரட்டி கிராமத்தில் நிலை கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஞானப்பழம் (43) என்பவர் மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.62 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X