என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணல் கடத்தல்: டிரைவர் கைது - டிராக்டர் பறிமுதல்
Byமாலை மலர்2 April 2021 12:50 PM GMT (Updated: 2 April 2021 12:50 PM GMT)
ஒரத்தநாடு அருகே மணல் கடத்தியது தொடர்பாக டிரைவரை கைது செய்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
ஒரத்தநாடு:
திருவோணம் போலீஸ் சரக பகுதியில் அரசுக்கு சொந்தமான ஆற்று படுகைகளில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருவோணம் போலீசார் நேற்று காலை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னஅம்மங்குடி அருகே காட்டாற்றில் மணல் அள்ளிய ஒரு டிப்பருடன் கூடிய டிராக்டரை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அனுமதி இன்றி அரசுக்கு சொந்தமான ஆற்றுப்படுகையில் மணல் அள்ளி கடத்தப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டர் டிரைவர் கலியரான்விடுதி கிராமத்தை சேர்ந்த வெண்ணில் குமார் (வயது 32) என்பவரை கைது செய்தனர். மேலும் டிராக்டரின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X