search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மணல் கடத்தல்: டிரைவர் கைது - டிராக்டர் பறிமுதல்

    ஒரத்தநாடு அருகே மணல் கடத்தியது தொடர்பாக டிரைவரை கைது செய்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    ஒரத்தநாடு:

    திருவோணம் போலீஸ் சரக பகுதியில் அரசுக்கு சொந்தமான ஆற்று படுகைகளில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருவோணம் போலீசார் நேற்று காலை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னஅம்மங்குடி அருகே காட்டாற்றில் மணல் அள்ளிய ஒரு டிப்பருடன் கூடிய டிராக்டரை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 
    விசாரணையில் அனுமதி இன்றி அரசுக்கு சொந்தமான ஆற்றுப்படுகையில் மணல் அள்ளி கடத்தப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டர் டிரைவர் கலியரான்விடுதி கிராமத்தை சேர்ந்த வெண்ணில் குமார் (வயது 32) என்பவரை கைது செய்தனர். மேலும் டிராக்டரின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×