search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.34,136-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை இன்று பவுனுக்கு மீண்டும் ரூ.34 ஆயிரத்தை தாண்டியது.

    சில வாரங்களுக்கு முன்பு தங்கம் விலை உயர்ந்தபடி இருந்ததால் பவுன் ரூ.34 ஆயிரத்தை தொட்டது. பின்னர் விலை குறைந்து ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. சில நாட்களாக விலையில் ஏற்ற-தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.608 அதிகரித்து ரூ.33 ஆயிரத்து 904-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.34 ஆயிரத்து 136-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 267 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1,300 உயர்ந்து ரூ.70 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.70-க்கு விற்கிறது.

    நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.33 ஆயிரத்து 296-க்கு விற்றது. இதனால் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 நாட்களில் பவுனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×