என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தோல்வி பயத்தின் விளைவுதான் வருமான வரி சோதனை -திருமாவளவன் கண்டனம்
Byமாலை மலர்2 April 2021 6:26 AM GMT (Updated: 2 April 2021 6:26 AM GMT)
எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து வருமான வரிச்சோதனை திட்டமிட்டு நடத்தப்படுவதாக திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்வகையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போல் அண்ணா நகரில் உள்ள திமுக எம்.எல்.ஏ. மோகன் மகன் கார்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் தோல்வி பயத்தின் விளைவுதான் வருமான வரித்துறை சோதனை என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து வருமான வரிச்சோதனை திட்டமிட்டு நடத்தப்படுவதாகவும், அரசியல் ரீதியான சோதனைகளை மக்கள் அறிவார்கள் என்றும் திருமாவளவன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X