என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்1 April 2021 2:37 PM GMT (Updated: 1 April 2021 2:37 PM GMT)
பணி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்ச்சி பெறுவோர் ஓராண்டு பயிற்சி டாக்டர்களாக பணிபுரிய வேண்டும். அதன்படி, அரசு மருத்துவக்கல்லூரிகளில் கடந்த 2015-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தவர்கள் கடந்த மாதத்துடன் தங்களது பயிற்சியை நிறைவு செய்தனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் பயிற்சி டாக்டர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி நீட்டிப்பை கண்டித்தும், அதை ரத்து செய்யக் கோரியும் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், பயிற்சி டாக்டர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்காதே, பணி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி நின்றனர். மேலும் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து பயிற்சி டாக்டர்கள் கூறும் போது, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம், என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X