என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளையில் இன்று நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல்
Byமாலை மலர்31 March 2021 12:33 PM GMT (Updated: 31 March 2021 12:33 PM GMT)
பாளையில் இன்று நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
பாளை பர்கிட்மாநகர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பூமாலை (வயது 70). இன்று காலை அவர் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது திடீரென்று ஏறினார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் பாளை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் பாளை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் தலைமையிலான வீரர்கள் தண்ணீர் தொட்டி மீது ஏறி பூமாலையை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவருக்கு சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை எச்சரித்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X