search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி - மேலும் 52 பேர் பாதிப்பு

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஐ தாண்டியுள்ளது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூரை சேர்ந்த 85 வயது முதியவர் சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று ஒரேநாளில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 334 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மாவட்டம் முழுவதும் 18 ஆயிரத்து 656 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஐ தாண்டியுள்ளது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×