என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு
Byமாலை மலர்27 March 2021 3:42 PM GMT (Updated: 27 March 2021 3:42 PM GMT)
சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி வாக்குப்பதிவு மற்றும் மே மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை வருகிற 4-ந் தேதி காலை 10 மணி முதல் வருகிற 6-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை மற்றும் மே மாதம் 2-ந் தேதி முழுவதும் மூடப்படும். மதுபானங்கள் விற்பனை செய்வது நிறுத்தப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X