என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காடு, சோளிங்கர் தொகுதிகளில் டாக்டர் ராமதாஸ் நாளை தேர்தல் பிரசாரம்
Byமாலை மலர்27 March 2021 10:32 AM GMT (Updated: 27 March 2021 10:32 AM GMT)
ஆற்காடு தொகுதியில் கே.எல்.இளவழகன், சோளிங்கர் தொகுதியில் ஆ.ம.கிருஷ்ணன் ஆகியோர் பா.ம.க. வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து ராமதாஸ் நாளை பிரசாரம் செய்கிறார்.
ஆற்காடு:
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஆற்காடு தொகுதியில் கே.எல்.இளவழகன், சோளிங்கர் தொகுதியில் ஆ.ம.கிருஷ்ணன் ஆகியோர் பா.ம.க. வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் .ராமதாஸ் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆற்காடு தொகுதி கலவையில் மாலை 3.30 மணிக்கும், திமிரி மேற்கு ஒன்றியம் காவனூர் பகுதியில் 4.30 மணிக்கும் பிரசாரம்செய்கிறார்.
சோளிங்கர் தொகுதியில் மருதாலம் கூட்ரோட்டில் மாலை 5.30 மணிக்கும், நெமிலியில் 6.30 மணிக்கும் பிரசாரம் செய்கிறார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், ஆற்காடு தொகுதி பொறுப்பாளருமான எம்.கே.முரளி கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X