search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    தஞ்சையில் மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

    தஞ்சையில் மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி முத்துலட்சுமி(வயது63). இவர்கள் அதே பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு கடையின் முன்பு முத்துலட்சுமி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், திடீரென முத்துலட்சுமியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், திருடன்.. திருடன்.. என சத்தம்போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். இது குறித்து கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×