என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமேசுவரத்தில் மீனவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம்
Byமாலை மலர்26 March 2021 8:39 AM GMT (Updated: 26 March 2021 8:39 AM GMT)
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை கடலுக்கு செல்வதை புறக்கணிக்க போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் தொடர்கதையாக உள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படும்போது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 54 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை கண்டித்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (27-ந் தேதி) கடலுக்கு செல்வதை புறக்கணிக்க போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் தொடர்கதையாக உள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படும்போது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 54 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை கண்டித்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (27-ந் தேதி) கடலுக்கு செல்வதை புறக்கணிக்க போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X