என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருமான வரித்துறை சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது -துரைமுருகன்
Byமாலை மலர்25 March 2021 12:21 PM GMT (Updated: 25 March 2021 12:21 PM GMT)
வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில்தான் சோதனை நடைபெறுகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
சென்னை:
திமுக எம்.எல்.ஏ.வும் திருவண்ணாமலை வேட்பாளருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்துகின்றனர். சென்னை, திருவண்ணாமலை உட்பட 18 இடங்களில் சோதனை நடத்துகின்றனர். எ.வ.வேலுவின் இல்லம், பள்ளி, கல்லூரிகள், அறக்கட்டளை, நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், வருமான வரி சோதனை நடைபெறுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு உருவாகி உள்ளது.
வருமான வரித்துறையினர் மேற்கொள்ளும் சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டி உள்ளார். தோல்வி பயத்தின் காரணமாகவே, மத்திய அரசை அதிமுக தூண்டி விட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில்தான் சோதனை நடைபெறுகிறது என்றார். வருமான வரித்துறை சோதனைக்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X