என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் சிறுமியை காதலிக்க பெற்றோர் எதிர்ப்பு- வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்25 March 2021 10:49 AM GMT (Updated: 25 March 2021 10:49 AM GMT)
கோவையில் சிறுமியை காதலிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
பொள்ளாச்சி ஓ.எஸ்.பி நகர் பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் மகன் அங்கு ராஜ் (21). கூலி தொழிலாளி. இவர் கோவில்பாளையம் அருகே கொண்டையம்பாளையம் ரோடு பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் 18 வயது பூர்த்தியாகாத சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த இவரின் பெற்றோர் மைனர் பெண்ணை காதலிக்கக் கூடாது என எச்சரித்தனர். இதில் மனமுடைந்த அங்குராஜ் நிறுவன வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
சிங்காநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (43). கூலித்தொழிலாளி. இவர் 20 ஆண்டாக மனைவியை பிரிந்து தனிமையில் வசித்து வந்தார். சமீபத்தில் நடந்த விபத்தில் இவரது காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த சிகிச்சையில் இவரது கால் அகற்றப்பட்டது. இதில் மனமுடைந்த சின்னசாமி வீட்டில் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி ஓ.எஸ்.பி நகர் பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் மகன் அங்கு ராஜ் (21). கூலி தொழிலாளி. இவர் கோவில்பாளையம் அருகே கொண்டையம்பாளையம் ரோடு பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் 18 வயது பூர்த்தியாகாத சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த இவரின் பெற்றோர் மைனர் பெண்ணை காதலிக்கக் கூடாது என எச்சரித்தனர். இதில் மனமுடைந்த அங்குராஜ் நிறுவன வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
சிங்காநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (43). கூலித்தொழிலாளி. இவர் 20 ஆண்டாக மனைவியை பிரிந்து தனிமையில் வசித்து வந்தார். சமீபத்தில் நடந்த விபத்தில் இவரது காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த சிகிச்சையில் இவரது கால் அகற்றப்பட்டது. இதில் மனமுடைந்த சின்னசாமி வீட்டில் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X