என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
Byமாலை மலர்24 March 2021 11:12 AM GMT (Updated: 24 March 2021 11:12 AM GMT)
வாழைத்தார் விலை சற்று அதிகரித்ததால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நொய்யல்:
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்கு நகர், மூலிமங்கலம், தவிட்டுப்பாளையம், பாலத்துறை, புகளூர், திருக்காடுதுறை, கோம்பு பாளையம், நடையனூர், பேச்சிப்பாறை, முத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூவன் வாழைத்தார், ரஸ்தாளி, பச்சை நாடன், கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை பயிரிட்டுள்ளனர்.
விளைந்த வாழைத்தார்களை கூலி ஆட்கள் மூலம் வெட்டி உள்ளூர் கடைக்காரர்களுக்கும், அருகாமையில் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அந்த வாழைத்தார்களை மொத்த வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.200-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. நேற்று பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.350-க்கும், ரஸ்தாளி ரூ.300-க்கும், பச்சை நாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும், மொந்தன் ரூ.350-க்கும் விற்பனையானது. வாழைத்தார் விலை சற்று அதிகரித்ததால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்கு நகர், மூலிமங்கலம், தவிட்டுப்பாளையம், பாலத்துறை, புகளூர், திருக்காடுதுறை, கோம்பு பாளையம், நடையனூர், பேச்சிப்பாறை, முத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூவன் வாழைத்தார், ரஸ்தாளி, பச்சை நாடன், கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை பயிரிட்டுள்ளனர்.
விளைந்த வாழைத்தார்களை கூலி ஆட்கள் மூலம் வெட்டி உள்ளூர் கடைக்காரர்களுக்கும், அருகாமையில் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அந்த வாழைத்தார்களை மொத்த வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.200-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. நேற்று பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.350-க்கும், ரஸ்தாளி ரூ.300-க்கும், பச்சை நாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும், மொந்தன் ரூ.350-க்கும் விற்பனையானது. வாழைத்தார் விலை சற்று அதிகரித்ததால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X