search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழைத்தார்
    X
    வாழைத்தார்

    வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு

    வாழைத்தார் விலை சற்று அதிகரித்ததால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    நொய்யல்:

    நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்கு நகர், மூலிமங்கலம், தவிட்டுப்பாளையம், பாலத்துறை, புகளூர், திருக்காடுதுறை, கோம்பு பாளையம், நடையனூர், பேச்சிப்பாறை, முத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூவன் வாழைத்தார், ரஸ்தாளி, பச்சை நாடன், கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை பயிரிட்டுள்ளனர்.

    விளைந்த வாழைத்தார்களை கூலி ஆட்கள் மூலம் வெட்டி உள்ளூர் கடைக்காரர்களுக்கும், அருகாமையில் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அந்த வாழைத்தார்களை மொத்த வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.200-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. நேற்று பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.350-க்கும், ரஸ்தாளி ரூ.300-க்கும், பச்சை நாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும், மொந்தன் ரூ.350-க்கும் விற்பனையானது. வாழைத்தார் விலை சற்று அதிகரித்ததால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×