search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தி.மு.க.பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்.
    X
    வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தி.மு.க.பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்.

    யார் அழைத்தாலும் குடும்பத்தில் ஒருவராக கலந்துகொள்பவர் ஆர்.காந்தி எம்எல்ஏ- துரைமுருகன் பேச்சு

    வேலூர் மாவட்டத்தில் யார் அழைத்தாலும் குடும்பத்தில் ஒருவராக கலந்துகொள்பவர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. என்று அறிமுக கூட்டத்தில் திமுக பொது செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. பேசினார்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    ராணிப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமையில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம் வரவேற்றார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து சிறப்புரையாற்றினார்.

    அப்போது தி.மு.க. தலைமையிடம் காந்தி தனக்கென்று எதையும் கேட்டது கிடையாது. தலைமை தான் ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளராக காந்தியை தேர்ந்தெடுத்து நிறுத்துகிறது.

    ராணிப்பேட்டை தொகுதியில் மட்டுமல்லாது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் யார் அழைத்தாலும் குடும்ப நிகழ்ச்சிகளில் குடும்பத்தில் ஒருவராக கலந்து கொள்பவர் காந்தி. இவரை நீங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சி.பஞ்சாட்சரம், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் பி.என்.உதயகுமார், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஏ.இம்ரானுல்ஹக், த.மு.மு.க மாவட்ட தலைவர் மு.முகமது அசேன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குண்டா என்ற சார்லஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் கே.சான்பாஷா, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஏ.விஸ்வநாதன், சி.பி.எம். மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் ஏ.சி.சாமிக்கண்ணு, ஜி.கே.உலகப்பள்ளி இயக்குனர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, பி.ஜி.ஹரி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் வசந்தி ரவி, மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ராணிப்பேட்டை நகர பொறுப்பாளர் பி.பூங்காவனம் நன்றி கூறினார்.
    Next Story
    ×