என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.65 லட்சம் மோசடி செய்த நகை அடகு கடை உரிமையாளர் கைது
Byமாலை மலர்23 March 2021 10:13 AM GMT (Updated: 23 March 2021 10:13 AM GMT)
கோவை துடியலூரில் ரூ.65 லட்சம் மோசடி செய்த நகை அடகு கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை துடியலூர் வி.கே.எல். நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52). இவர் பெரியகடைவீதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் ரத்தினபுரியை சேர்ந்த முத்துக்குமார் (38). இவர் நகை அடமான கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துக்குமார் தனது வீட்டை ரமேசிடம் அடமானம் வைத்து ரூ.75 லட்சம் பெற்றார். அதன் பின்னர் ரூ.10 லட்சம் திருப்பி செலுத்திவிட்டார். மீதி ரூ.65 லட்சத்தை செலுத்த தாமதம் ஆனது.
இந்நிலையில் தனது வீட்டு பத்திரம் தொலைந்து விட்டதாக முத்துக்குமார் போலீசில் புகார் செய்து டுப்ளிகேட் பத்திரத்தை வாங்கி வைத்துக்கொண்டார். இந்நிலையில் ரமேஷ் தொடர்ந்து பணத்தை கேட்டு வந்தார். இதனையடுத்து மீதி பணத்திற்கு பதில் செக் கொடுத்தார். அதனை ரமேஷ் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இது குறித்து அவர் கேட்டபோது முத்துக்குமார் பதில் கூறி சமாளித்தார்.
இந்நிலையில் முத்துக்குமார் டுப்ளிகேட் பத்திரம் மூலம் தனது வீட்டை விற்க முயன்றது. ரமேசுக்கு தெரியவந்ததும் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.
கோவை துடியலூர் வி.கே.எல். நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52). இவர் பெரியகடைவீதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் ரத்தினபுரியை சேர்ந்த முத்துக்குமார் (38). இவர் நகை அடமான கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துக்குமார் தனது வீட்டை ரமேசிடம் அடமானம் வைத்து ரூ.75 லட்சம் பெற்றார். அதன் பின்னர் ரூ.10 லட்சம் திருப்பி செலுத்திவிட்டார். மீதி ரூ.65 லட்சத்தை செலுத்த தாமதம் ஆனது.
இந்நிலையில் தனது வீட்டு பத்திரம் தொலைந்து விட்டதாக முத்துக்குமார் போலீசில் புகார் செய்து டுப்ளிகேட் பத்திரத்தை வாங்கி வைத்துக்கொண்டார். இந்நிலையில் ரமேஷ் தொடர்ந்து பணத்தை கேட்டு வந்தார். இதனையடுத்து மீதி பணத்திற்கு பதில் செக் கொடுத்தார். அதனை ரமேஷ் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இது குறித்து அவர் கேட்டபோது முத்துக்குமார் பதில் கூறி சமாளித்தார்.
இந்நிலையில் முத்துக்குமார் டுப்ளிகேட் பத்திரம் மூலம் தனது வீட்டை விற்க முயன்றது. ரமேசுக்கு தெரியவந்ததும் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X