search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் ரெயில் நிலையத்தில் லாரியில் இருந்து தொழிலாளர்கள் அரிசி மூட்டைகளை சரக்கு ரெயிலில் ஏற்றியபோது
    X
    திருவாரூர் ரெயில் நிலையத்தில் லாரியில் இருந்து தொழிலாளர்கள் அரிசி மூட்டைகளை சரக்கு ரெயிலில் ஏற்றியபோது

    பொதுவினியோக திட்டத்திற்காக 1,000 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

    அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி திருவாரூரில் இருந்து தேனிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 1,000 டன் அரிசி நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவாரூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் அரிசி மூட்டைகளுடன் சரக்கு ரெயில் தேனிக்கு புறப்பட்டு சென்றன.
    Next Story
    ×