search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தபோது எடுத்தபடம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தபோது எடுத்தபடம்.

    காங்கேயம் அருகே காரில் வந்தவரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல் - பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

    முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.
    காங்கேயம்:

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, வெள்ளகோவில் அருகே உள்ள லக்கமநாயக்கன்பட்டி பகுதியில், நேற்று மதியம் 12 மணியளவில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொ.ஜெகன்நாதன் தலைமையிலான தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்தை காரை நிறுத்தி காரில் இருந்தவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 200 இருப்பதும், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை என்றும் தெரியவந்தது.

    மேலும் அவர் காங்கேயம் தாலுகா, தாசவநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ப.சிவசாமி என தெரிய வந்தது.

    இதனையடுத்து முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், காங்கேயம் தாசில்தாருமான சிவகாமியிடம் ஒப்படைத்தனர். பின்னர் இந்தப் பணம் காங்கேயம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×