என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுக்கூர் அருகே அரசு அலுவலக டிரைவருக்கு கொலை மிரட்டல் - 2 பேர் கைது
மதுக்கூர்:
பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தில் செபாஸ்டின் (வயது 47) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அங்கு தேர்தல் பணிபுரிந்து வரும் 2 பெண் ஊழியர்களை இரவு நேரமாகிவிட்டதால் அவர்களை மதுக்கூர் அருகே மோகூரில் உள்ள அவர்களது வீட்டில் விட்டு வருமாறு செபாஸ்டினிடம், சப்-கலெக்டர் கூறினார்.
இதையடுத்து அந்த 2 பெண்களையும் காரில் ஏற்றி கொண்டு அவர்களது வீட்டில் விட்டார். பின்னர் அதே காரில் திரும்பி கொண்டிருந்தார்.
மோகூர் அருகே வந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறிறுத்து நிறுத்தினர்.
பின்னர் நீ மணல் கொள்ளையை தடுத்த வி.ஏ.ஓ.வின் கணவர் தானே என கூறி செபாஸ்டினிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் மதுக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து மோகூரை சேர்ந்த நல்லப்பன் மகன் கோபால் (30) மற்றும் பொன்னுசாமி மகன் கோபால் (40) ஆகிய 2 பேரை கைது செய்தார். மற்ற 2 பேரை தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்