search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

    திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள முருகன் என்பவரது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அவர் அங்கு இருந்து மின்இணைப்பு கொடுப்பதற்காக கம்பியை மின்கம்பத்தில் கட்ட முயன்றார். அப்போது அங்கு இருந்த உயர் அழுத்த மின் கம்பி அவர் மீது பட்டு மின்சாரம் தாக்கியது.

    இதில் கிருஷ்ணமூர்த்தி தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×