என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருமத்தம்பட்டி காட்டுப்பகுதியில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்20 March 2021 9:36 AM GMT (Updated: 20 March 2021 9:36 AM GMT)
கருமத்தம்பட்டி காட்டுப்பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருமத்தம்பட்டி:
கருமத்தம்பட்டி அடுத்த ராயர்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் உத்தரபிரதேசம் மாநிலம் பஜனூர் பகுதியை சேர்ந்த ஆதேஷ்குமார் (வயது 28) என்பவர் கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த நிலையில் ஆதேஷ்குமார் திடீரென பணிபுரியும் பகுதியில் இருந்து மாயமானார். இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் உடன் பணிபுரியும் பணியாளர்கள் அவரை தேடினர்.
அப்போது தொழிற்சாலை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆதேஷ்குமார் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருமத்தம்பட்டி அடுத்த ராயர்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் உத்தரபிரதேசம் மாநிலம் பஜனூர் பகுதியை சேர்ந்த ஆதேஷ்குமார் (வயது 28) என்பவர் கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த நிலையில் ஆதேஷ்குமார் திடீரென பணிபுரியும் பகுதியில் இருந்து மாயமானார். இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் உடன் பணிபுரியும் பணியாளர்கள் அவரை தேடினர்.
அப்போது தொழிற்சாலை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆதேஷ்குமார் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X