என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் மோதல்- 2 பேர் கைது
Byமாலை மலர்19 March 2021 11:44 AM GMT (Updated: 19 March 2021 11:44 AM GMT)
திருவள்ளூர் அருகே முன்விரோத தகராறில் பக்கத்து வீட்டு நபரை தாக்கிய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கல்லம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுகுணா (வயது 37). இவர் நேற்றுமுன்தினம் தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சோனியா ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அது குறித்து கேட்டபோது சுகுணாவையும் அவரது கணவர் குட்டி, உறவினர் பப்பு, சின்னப்பொண்ணு ஆகியோரை சோனியாவின் உறவினர்களான ஆரோன், எட்வின், பாலா, தர்மன் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து சுகுணா தனது உறவினரான குட்டி, செல்வம், பப்பு, சாந்தி, வசந்தா, மணிகண்டன், சின்னபொண்ணு ஆகியோருடன் சேர்ந்து சோனியாவையும் அவரது உறவினர் பிரகாஷ், எட்வின் ஆகியோரை தாக்கியுள்ளனர். இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக மப்பேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து ஆரோன் (35), குட்டி (44) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X