search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    வாலாஜாபேட்டையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

    வாலாஜாபேட்டையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    வாலாஜாபேட்டை பெல்லியப்பா நகரை அடுத்த சொர்க்கபூமி நகரில் வசிப்பவர் ரவிக்குமார் (வயது 43). வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வியாபாரத்துக்கு சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து வாலாஜா போலீசில் ரவிக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து தடயங்களை சேகரித்து திருட்டில் ஈடுபட்டு தப்பியவரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×