search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பாக இதுவரை 273 வழக்குகள் பதிவு

    திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பாக இதுவரை 273 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் மீறல் நடைபெறாமல் இருக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் திருத்துறைப்பூண்டயில் 73 வழக்குகள், திருவாரூரில் 69 வழக்குகள், நன்னிலத்தில் 53 வழக்குகள், மன்னார்குடயில் 78 வழக்குகள் என மொத்தம் 273 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×