search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு- மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு

    ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
    சென்னை:

    முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர். தங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறி உள்ளனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 16ம் தேதி வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான சம்மன் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும், ஸ்டாலினுக்கு எதிரான இந்த அவதூறு வழக்குகளை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
    Next Story
    ×