என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆனைமலை அருகே திருமணமான 20 நாளில் புதுப்பெண் தற்கொலை
Byமாலை மலர்17 March 2021 9:31 AM GMT (Updated: 17 March 2021 9:31 AM GMT)
ஆனைமலை அருகே திருமணமான 20 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
திண்டுக்கல் மாவட்டம் நெல்லாகோட்டையை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகள் சங்கீதா (வயது 23). கடந்த 20 நாட்களுக்கு முன்பு பாண்டியராஜன் தனது மகளின் விருப்பம் இல்லாமல் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஓடையாகுளத்தை சேர்ந்த உறவினரான மகாலிங்கம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சங்கீதா தனது பெற்றோர் மீது கோபம் அடைந்து அவர்களுடன் பேசாமல் இருந்தார். தன்னுடைய விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைத்ததால் சங்கீதா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சங்கீதாவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 20 நாளில் சங்கீதா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நெல்லாகோட்டையை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகள் சங்கீதா (வயது 23). கடந்த 20 நாட்களுக்கு முன்பு பாண்டியராஜன் தனது மகளின் விருப்பம் இல்லாமல் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஓடையாகுளத்தை சேர்ந்த உறவினரான மகாலிங்கம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சங்கீதா தனது பெற்றோர் மீது கோபம் அடைந்து அவர்களுடன் பேசாமல் இருந்தார். தன்னுடைய விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைத்ததால் சங்கீதா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சங்கீதாவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 20 நாளில் சங்கீதா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X