என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்துப்பேட்டை அருகே டிரைவரிடம் செல்போன் பறிப்பு- வாலிபர் கைது
Byமாலை மலர்15 March 2021 8:14 PM GMT (Updated: 15 March 2021 8:14 PM GMT)
முத்துப்பேட்டை அருகே மினிவேனை வழிமறித்து டிரைவரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவனோடை தெற்குக்காடு கிராமத்தை சேர்ந்த சோமசுந்தரம். இவருடைய மகன் இளையராஜா(வயது32). இவர் நெல் மூட்டைகளை மினிவேனில் ஏற்றிக்கொண்டு மன்னார்குடி சாலையில் உள்ள இடைச்சிமுளை நெல் குடோனில் இறங்கி விட்டு முத்துப்பேட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தார். கோவிலூர் கோட்டகம் அருகே அவர் சென்று கொண்டிருந்த போது அங்கு ஆயுதங்களுடன் மினிவேனை வழிமறித்த 3 பேர் இளையராஜாவின் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து இளையராஜா, முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மங்கலூர் பைபாஸ் பகுதியில் ஒருவாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முத்துப்பேட்டை அருகே உள்ள வடக்குமங்கலூர் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் மகன் வெங்கடேஷ் (23) என்றும் அவர் மற்றும் 2 பேர் சேர்ந்து இளையராஜாவிடம் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெங்கடேசை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X