search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தாண்டிக்குடி அருகே தொழிலாளி தற்கொலை

    தாண்டிக்குடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பெரும்பாறை:

    தாண்டிக்குடி அருகே உள்ள பண்ணைக்காடு ஆடிப்பட்டியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 56). கூலித்தொழிலாளி. கடந்த சில மாதங்களாக இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதற்காக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனசேகரன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×