என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நகை வியாபாரியிடம் 3 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்
Byமாலை மலர்14 March 2021 2:07 AM GMT (Updated: 14 March 2021 2:07 AM GMT)
நகை வியாபாரியிடம் 3 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை பஸ் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையத்தில் நின்ற பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், மதுரையைச் சேர்ந்த நகை வியாபாரியான கோவிந்தராஜ் (வயது 63) என்பவரது துணிப்பையில் 2 கிலோ 971 கிராம் எடையுள்ள வெள்ளி கொலுசுகள் இருந்தன.
அவர், மதுரையில் இருந்து நகைகளை மொத்தமாக வாங்கி வந்து, அம்பை பகுதியில் உள்ள கடைகளுக்கு வழங்கி விட்டு, மீதியானவற்றை திருப்பி கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால், அவற்றுக்கு உரிய ஆவணம் இல்லாததால், அந்த கொலுசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கொலுசுகளின் மதிப்பு சுமார்ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X