என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நாட்டை விட்டே போகத் தயார் -சந்தானத்திடம் சவால் விட்ட சத்குரு
Byமாலை மலர்13 March 2021 4:33 PM GMT (Updated: 13 March 2021 4:54 PM GMT)
கோவில் மீட்பு தொடர்பாக சந்தானம் முன்வைத்த கேள்விகளுக்கு சத்குரு உணர்ச்சிப்பூர்வமாகவும், தெளிவாகவும் பதிலளித்தார்.
சென்னை:
#கோவில்அடிமைநிறுத்து என்ற இயக்கம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் நடிகர் சந்தானம் பங்கேற்று சத்குருவுடன் கலந்துரையாடினார். அப்போது, சமூக வலைத்தளங்கள் மூலம் கோவில் மீட்பு மற்றும் சத்குரு தொடர்பாக தன்னிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளை சத்குருவிடம் முன் வைத்தார் சந்தானம். இதற்கு உணர்ச்சிப்பூர்வமாகவும், தெளிவாகவும் சத்குரு பதிலளித்தார்.
கேள்வி: கோவில்கள் மீட்பு பிரச்சனையை நீங்கள் கையில் எடுத்ததும், உங்களைப்பற்றி நிறைய கமென்டுகள் வருகின்றன. அவர் காட்டை ஆக்கிரமித்துவிட்டார், இப்போது கோவிலில் கை வைக்கிறார், என ஒரு குறிப்பிட்ட குரூப் குற்றம்சாட்டுகிறதே?
பதில்: ஒரு முறை அல்ல, நூறு முறை இதற்கு பதில் சொல்லியிருக்கிறேன். யார் யாரெல்லாம் புகார் சொன்னார்களோ, அவர்கள் அனைவரையும் அழைத்தேன், ஒருவர்கூட வரவில்லை. வயிற்றுப்பிழைப்புக்காக இப்படி பேசுகிறார்கள். நீங்கள் நேர்மையானவர்தானே? நீங்கள் வாருங்கள், உங்கள் பத்திரிகையாளர் நண்பர்களை அழைத்து வாருங்கள். உங்களை சுதந்திரமாக விட்டுவிடுவேன். ஆசிரமத்தில் எங்கு வேண்டுமானாலும் போய் பாருங்கள். தேவைப்பட்டால் வனத்துறை அதிகாரியையும் அழைத்து வரலாம்.
வனத்துறைக்கு சொந்தமான இடத்தையோ, பழங்குடியினர் பகுதியையோ அல்லது வேறு யாருடைய நிலத்தையோ ஒரு அங்குல இடத்தையாவது நாங்கள் ஆக்கிரமித்ததாக நிரூபித்தால், தமிழகத்தை விட்டு மட்டுமின்றி, நாட்டை விட்டே சென்றுவிடுகிறேன். எத்தனையோ தடவை சொன்னேன், யாரும் ஆய்வு செய்ய வரவில்லையே? வனத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவித்த தகவலில், ஈஷா பவுண்டேசன் வனத்துறை நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என தெளிவாக கூறி உள்ளது.
இவ்வாறு சத்குரு கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X