search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திண்டுக்கல் அருகே நடந்த விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி

    திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்த விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள பாடியூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). அரசு பஸ் கண்டக்டர். நேற்று முன்தினம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் முள்ளிப்பாடி-குளத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். மணல்மேடு அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் சாய்ந்தது. 

    இதில் தலையில் பலத்த காயமடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×